thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalமருந்துMarundhu
குறள் 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

Atradhu Arindhu Kataippitiththu Maaralla

Thuykka Thuvarap Pasiththu

Know digestion; with keen appetite Eat what is suitable and right

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

MK (மு.கருணாநிதி)

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

Couplet

Knowing the food digested well, when hunger prompteth thee,With constant care, the viands choose that well agree

Explanation

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)