மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin
After digestion one who feeds His body no medicine needs
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
SP (சாலமன் பாப்பையா)
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
MK (மு.கருணாநிதி)
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
Couplet
No need of medicine to heal your body's pain,If, what you ate before digested well, you eat again
Explanation
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested