thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகள்ளுண்ணாமைKallunnaamai
குறள் 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum

Nanjunpaar Kallun Pavar

They take poison who take toddy And doze ev'n like a dead body

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

MK (மு.கருணாநிதி)

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

Couplet

Sleepers are as the dead, no otherwise they seem;Who drink intoxicating draughts, they poison quaff, we deem

Explanation

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters