thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகள்ளுண்ணாமைKallunnaamai
குறள் 921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum

Katkaadhal Kontozhuku Vaar

Foes fear not who for toddy craze The addicts daily their glory lose

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

SP (சாலமன் பாப்பையா)

போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

MK (மு.கருணாநிதி)

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்

Couplet

Who love the palm's intoxicating juice, each day,No rev'rence they command, their glory fades away

Explanation

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)