thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalவரைவின் மகளிர்Varaivinmakalir
குறள் 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.

Aayum Arivinar Allaarkku Anangenpa

Maaya Makalir Muyakku

Senseless fools are lured away By arms of sirens who lead astray

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

MK (மு.கருணாநிதி)

வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்

Couplet

As demoness who lures to ruin woman's treacherous loveTo men devoid of wisdom's searching power will prove

Explanation

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female