thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalவரைவின் மகளிர்Varaivinmakalir
குறள் 915

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.

Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin

Maanta Arivi Navar

The lofty wise will never covet The open charms of a vile harlot

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

SP (சாலமன் பாப்பையா)

இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்

Couplet

From contact with their worthless charms, whose charms to all are free,The men with sense of good and lofty wisdom blest will flee;

Explanation

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights