thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalவரைவின் மகளிர்Varaivinmakalir
குறள் 912

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.

Payandhookkip Panpuraikkum Panpin Makalir

Nayandhookki Nallaa Vital

Avoid ill-natured whores who feign Love only for their selfish gain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.

MK (மு.கருணாநிதி)

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

Couplet

Who weigh the gain, and utter virtuous words with vicious heart,Weighing such women's worth, from their society depart

Explanation

One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)