thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 910

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum

Penserndhaam Pedhaimai Il

Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

MK (மு.கருணாநிதி)

சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்

Couplet

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,Folly, that springs from overweening woman's love, is never found

Explanation

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom