thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபகைத்திறம் தெரிதல்Pakaiththirandheridhal
குறள் 875

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan

Indhunaiyaak Kolkavatrin Ondru

Alone, if two foes you oppose Make one of them your ally close

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

MK (மு.கருணாநிதி)

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்

Couplet

Without ally, who fights with twofold enemy o'ermatched,Must render one of these a friend attached

Explanation

He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself)