பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபகைத்திறம் தெரிதல்Pakaiththirandheridhal
குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan
Forlorn, who rouses many foes The worst insanity betrays
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
SP (சாலமன் பாப்பையா)
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
MK (மு.கருணாநிதி)
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்
Couplet
Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn
Explanation
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men