thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபகை மாட்சிPakaimaatchi
குறள் 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.

Kallaan Vekulum Siruporul Egngnaandrum

Ollaanai Ollaa Tholi

Glory's light he will not gain Who fails to fight a fool and win

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

SP (சாலமன் பாப்பையா)

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

MK (மு.கருணாநிதி)

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்

Couplet

The task of angry war with men unlearned in virtue's loreWho will not meet, glory shall meet him never more

Explanation

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)