thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபகை மாட்சிPakaimaatchi
குறள் 868

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.

Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku

Inanilanaam Emaap Putaiththu

With no virtue but full of vice He loses friends and delights foes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

MK (மு.கருணாநிதி)

குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்

Couplet

No gracious gifts he owns, faults many cloud his fame;His foes rejoice, for none with kindred claim

Explanation

He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes