thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபகை மாட்சிPakaimaatchi
குறள் 866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.

Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan

Penaamai Penap Patum

Blind in rage and mad in lust To have his hatred is but just

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

MK (மு.கருணாநிதி)

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

Couplet

Blind in his rage, his lustful passions rage and swell;If such a man mislikes you, like it well

Explanation

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure