thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalஇகல்Ikal
குறள் 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பார஧க்கும் நோய்.

Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum

Panpinmai Paarikkum Noi

Hatred is a plague that divides And rouses illwill on all sides

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

SP (சாலமன் பாப்பையா)

எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்

Couplet

Hostility disunion's plague will bring,That evil quality, to every living thing

Explanation

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise