thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalவிருந்தோம்பல்Virundhompal
குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

Viththum Italventum Kollo Virundhompi

Michchil Misaivaan Pulam

Should his field be sown who first Feeds the guests and eats the rest?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

SP (சாலமன் பாப்பையா)

விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

MK (மு.கருணாநிதி)

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

Couplet

Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise

Explanation

Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?