ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi
He listens not nor himself knows Plague is his life until it goes
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
SP (சாலமன் பாப்பையா)
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
MK (மு.கருணாநிதி)
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்
Couplet
Advised, he heeds not; of himself knows nothing wise;This man's whole life is all one plague until he dies
Explanation
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a