thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபேதைமைPedhaimai
குறள் 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

Edhilaar Aarath Thamarpasippar Pedhai

Perunjelvam Utrak Katai

Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

MK (மு.கருணாநிதி)

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது

Couplet

When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore

Explanation

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve