thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபேதைமைPedhaimai
குறள் 831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.

Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu

Oodhiyam Poka Vital

This is folly's prominent vein To favour loss and forego gain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

MK (மு.கருணாநிதி)

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

Couplet

What one thing merits folly's special name.Letting gain go, loss for one's own to claim

Explanation

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain