thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalதீ நட்புThee Natpu
குறள் 820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei

Mandril Pazhippaar Thotarpu

Keep aloof from those that smile At home and in public revile

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

MK (மு.கருணாநிதி)

தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்

Couplet

In anywise maintain not intercourse with those,Who in the house are friends, in hall are slandering foes

Explanation

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public