thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபழைமைPazhaimai
குறள் 809

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai

Vitaaar Vizhaiyum Ulaku

To love such friends the world desires Whose friendship has unbroken ties

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

SP (சாலமன் பாப்பையா)

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

MK (மு.கருணாநிதி)

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்

Couplet

Friendship of old and faithful friends,Who ne'er forsake, the world commends

Explanation

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy