thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalநட்பாராய்தல்Natpaaraaidhal
குறள் 791

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

Naataadhu Nattalir Ketillai Nattapin

Veetillai Natpaal Pavarkku

Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்

Couplet

To make an untried man your friend is ruin sure;For friendship formed unbroken must endure

Explanation

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry