thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்Araniyalஅரண்Aran
குறள் 747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.

Mutriyum Mutraa Therindhum Araippatuththum

Patrar Kariyadhu Aran

Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

MK (மு.கருணாநிதி)

முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்

Couplet

A fort should be impregnable to foes who gird it round,Or aim there darts from far, or mine beneath the ground

Explanation

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it