thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.

Piniyinmai Selvam Vilaivinpam Emam

Aniyenpa Naattiv Vaindhu

Rich yield, delight, defence and wealth Are jewels of lands with blooming health

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்

Couplet

A country's jewels are these five: unfailing health,Fertility, and joy, a sure defence, and wealth

Explanation

Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom