thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அஞ்சாமைAvaiyanjaamai
குறள் 725

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

Aatrin Alavarindhu Karka Avaiyanjaa

Maatrang Kotuththar Poruttu

Grammar and logic learn so that Foes you can boldly retort

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

MK (மு.கருணாநிதி)

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்

Couplet

By rule, to dialectic art your mind apply,That in the council fearless you may make an apt reply

Explanation

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)