இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
Itaidherindhu Nankunarndhu Solluka Sollin
Nataidherindha Nanmai Yavar
Who know the art of speech shall suit Their chosen words to time in fact
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
SP (சாலமன் பாப்பையா)
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.
MK (மு.கருணாநிதி)
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்
Couplet
Good men to whom the arts of eloquence are known,Should seek occasion meet, and say what well they've made their own
Explanation
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)