thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalகுறிப்பறிதல்Kuripparidhal
குறள் 710

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற.

Nunniyam Enpaar Alakkungol Kaanungaal

Kannalladhu Illai Pira

The scale of keen discerning minds Is eye and eye that secrets finds

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை

Couplet

The men of keen discerning soul no other test apply(When you their secret ask) than man's revealing eye

Explanation

The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else