thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalகுறிப்பறிதல்Kuripparidhal
குறள் 708

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின்.

Mukamnokki Nirka Amaiyum Akamnokki

Utra Thunarvaarp Perin

Just standing in front would suffice For those who read the mind on face

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

MK (மு.கருணாநிதி)

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது

Couplet

To see the face is quite enough, in presence brought,When men can look within and know the lurking thought

Explanation

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face