thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalகடவுள் வாழ்த்துKatavul Vaazhththu
குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal

Manakkavalai Maatral Aridhu

His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

SP (சாலமன் பாப்பையா)

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

MK (மு.கருணாநிதி)

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

Couplet

Unless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious pain

Explanation

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable