thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalமக்கட்பேறுPudhalvaraip Perudhal
குறள் 67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu

Mundhi Iruppach Cheyal

A father's duty to his son is To seat him in front of the wise

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

SP (சாலமன் பாப்பையா)

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

MK (மு.கருணாநிதி)

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

Couplet

Sire greatest boon on son confers, who makes him meet,In councils of the wise to fill the highest seat

Explanation

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned