thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத்திட்பம்Vinaiththitpam
குறள் 662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

Oororaal Utrapin Olkaamai Ivvirantin

Aarenpar Aaindhavar Kol

Shun failing fuss; fail not purpose These two are maxims of the wise

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

SP (சாலமன் பாப்பையா)

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்

Couplet

'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'These two define your way, so those that search out truth declare

Explanation

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject