thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத் தூய்மைVinaiththooimai
குறள் 660

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Salaththaal Porulseydhe Maarththal Pasuman

Kalaththulneer Peydhireei Yatru

The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

MK (மு.கருணாநிதி)

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்

Couplet

In pot of clay unburnt he water pours and would retain,Who seeks by wrong the realm in wealth and safety to maintain

Explanation

(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water