thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalசொல்வன்மைSolvanmai
குறள் 650

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu

Unara Viriththuraiyaa Thaar

Who can't express what they have learnt Are bunch of flowers not fragrant

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

SP (சாலமன் பாப்பையா)

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

MK (மு.கருணாநிதி)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

Couplet

Like scentless flower in blooming garland boundAre men who can't their lore acquired to other's ears expound

Explanation

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance