thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅமைச்சுAmaichchu
குறள் 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu

Aindhutan Maantadhu Amaichchu

With these he guards people, -by his Knowledge, firmness and manliness

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

SP (சாலமன் பாப்பையா)

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

MK (மு.கருணாநிதி)

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்

Couplet

A minister must greatness own of guardian power, determined mind,Learn'd wisdom, manly effort with the former five combined

Explanation

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,