thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஆள்வினை உடைமைAalvinaiyutaimai
குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu

Aalvinai Inmai Pazhi

Misfortune is disgrace to none The shame is nothing learnt or done

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

SP (சாலமன் பாப்பையா)

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

MK (மு.கருணாநிதி)

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

Couplet

'Tis no reproach unpropitious fate should ban;But not to do man's work is foul disgrace to man

Explanation

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace