thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஆள்வினை உடைமைAalvinaiyutaimai
குறள் 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai

Theerndhaarin Theerndhandru Ulaku

In doing work don't break and shirk The world will quit who quits his work

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

MK (மு.கருணாநிதி)

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்

Couplet

In action be thou, 'ware of act's defeat;The world leaves those who work leave incomplete

Explanation

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work