குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum
Quenchless lamp of ancestry goes When foul idleness encloses
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
SP (சாலமன் பாப்பையா)
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
MK (மு.கருணாநிதி)
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்
Couplet
Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light
Explanation
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished