பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam
Kannottam Illaadha Kan
Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?
MK (மு.கருணாநிதி)
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்
Couplet
Where not accordant with the song, what use of sounding chordsWhat gain of eye that no benignant light affords
Explanation
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness