பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசெங்கோன்மைSengonmai
குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin
The king protects the entire earth And justice protects his royal worth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
SP (சாலமன் பாப்பையா)
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
MK (மு.கருணாநிதி)
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்
Couplet
The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects
Explanation
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king