இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku
Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
SP (சாலமன் பாப்பையா)
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
MK (மு.கருணாநிதி)
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்
Couplet
Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields
Explanation
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice