அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol
The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
SP (சாலமன் பாப்பையா)
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
MK (மு.கருணாநிதி)
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்
Couplet
Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king
Explanation
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described