thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசெங்கோன்மைSengonmai
குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

Andhanar Noorkum Araththirkum Aadhiyaai

Nindradhu Mannavan Kol

The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

MK (மு.கருணாநிதி)

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

Couplet

Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king

Explanation

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described