thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசுற்றந் தழால்Sutrandhazhaal
குறள் 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin

Adhunokki Vaazhvaar Palar

From public gaze when kings perceive Each one's merits so many thrive

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

MK (மு.கருணாநிதி)

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்

Couplet

Where king regards not all alike, but each in his degree,'Neath such discerning rule many dwell happily

Explanation

Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit