thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசுற்றந் தழால்Sutrandhazhaal
குறள் 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

Perungotaiyaan Penaan Vekuli Avanin

Marungutaiyaar Maanilaththu Il

Large giver and wrathless man Commands on earth countless kinsmen

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

MK (மு.கருணாநிதி)

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்

Couplet

Than one who gifts bestows and wrath restrains,Through the wide world none larger following gains

Explanation

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger