thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசுற்றந் தழால்Sutrandhazhaal
குறள் 523

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.

Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak

Kotindri Neernirain Thatru

A kinless wealth is like a tank Which overflows without a bank

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

MK (மு.கருணாநிதி)

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்

Couplet

His joy of life who mingles not with kinsmen gathered round,Is lake where streams pour in, with no encircling bound

Explanation

The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a