thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து வினையாடல்Therindhuvinaiyaatal
குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan

Veraakum Maandhar Palar

Though tried and found fit, yet we see Many differ before duty

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

SP (சாலமன் பாப்பையா)

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

MK (மு.கருணாநிதி)

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்

Couplet

Even when tests of every kind are multiplied,Full many a man proves otherwise, by action tried

Explanation

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)