thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடனறிதல்Itanaridhal
குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

Sirainalanum Seerum Ilareninum Maandhar

Urainilaththotu Ottal Aridhu

To face a foe at home is vain Though fort and status are not fine

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

SP (சாலமன் பாப்பையா)

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

MK (மு.கருணாநிதி)

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல

Couplet

Though fort be none, and store of wealth they lack,'Tis hard a people's homesteads to attack

Explanation

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress