thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகாலமறிதல்Kaalamaridhal
குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye

Seydhar Kariya Seyal

When comes the season ripe and rare Dare and do hard things then and there

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

MK (மு.கருணாநிதி)

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

Couplet

When hardest gain of opportunity at last is won,With promptitude let hardest deed be done

Explanation

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)