thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகாலமறிதல்Kaalamaridhal
குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Pollena Aange Puramveraar Kaalampaarththu

Ulverppar Olli Yavar

The wise jut not their vital fire They watch their time with hidden ire

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

SP (சாலமன் பாப்பையா)

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

MK (மு.கருணாநிதி)

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

Couplet

The glorious once of wrath enkindled make no outward show,At once; they bide their time, while hidden fires within them glow

Explanation

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within