thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகாலமறிதல்Kaalamaridhal
குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum

Vendharkku Ventum Pozhudhu

By day the crow defeats the owl Kings need right time their foes to quell

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

MK (மு.கருணாநிதி)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

Couplet

A crow will conquer owl in broad daylight;The king that foes would crush, needs fitting time to fight

Explanation

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time