thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவலியறிதல்Valiyaridhal
குறள் 479

அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

Alavara�ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola

Illaakith Thondraak Ketum

Who does not know to live in bounds His life seems rich but thins and ends

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

MK (மு.கருணாநிதி)

இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்

Couplet

Who prosperous lives and of enjoyment knows no bound,His seeming wealth, departing, nowhere shall be found

Explanation

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue