ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri
Know the limit; grant with measure This way give and guard your treasure
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
SP (சாலமன் பாப்பையா)
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.
MK (மு.கருணாநிதி)
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்
Couplet
With knowledge of the measure due, as virtue bids you give!That is the way to guard your wealth, and seemly live
Explanation
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property